இந்தியா

பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்

489 பேர் வாக்களித்த நிலையில், ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் கிடைத்தன.

மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது.

489 பேர் வாக்களித்த நிலையில், ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் கிடைத்தன. எனினும், இது அரசியலமைப்பு திருத்த மசோதா என்பதால் நிறைவேறத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இது தோல்வியடைந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று இரவு 8.30 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

பிரதமர் மோடி என்ன பேசப் போகிறார் என நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.