பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையும், அதனால் ஏற்படும் சவால்களும் காணப்படுகின்றன. இந்த வெப்பம் நம் அனைவருக்கும் கடுமையானது. எனவே, உங்களால் முடிந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து நீரேற்றத்துடன் இருங்கள்; வெளியே செல்லும்போது தண்ணீரை உடன் வைத்திருங்கள். மற்றவர்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுங்கள். இதுபோன்ற காலநிலையில், இத்தகைய கருணை மனதிற்குப் பேருதவியாக அமையும்.
இந்தக் கடும் வெப்ப அலையின் போது, முடிந்தபோதெல்லாம் வயதான பெற்றோர்கள், தாத்தா, பாட்டி மற்றும் அன்புக்குரியவர்களைத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரியுங்கள். அவர்கள் போதுமான அளவு நீர் அருந்தவும், நண்பகல் உச்ச நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், முடிந்தபோதெல்லாம் ஓய்வெடுக்கவும் நினைவூட்டுங்கள்.
இந்தக் கடும் வெயிலில், நம்மைச் சுற்றியுள்ள பறவைகளையும் விலங்குகளையும் நாம் நினைவில் கொள்வோம். உங்கள் வீடு, பால்கனிகள், மொட்டை மாடிகள், கடைகள் அல்லது அலுவலகங்களுக்கு வெளியே வைக்கப்படும் ஒரு சிறிய கிண்ணத்தில் உள்ள தண்ணீர், தாகமாக இருக்கும் ஒரு பறவைக்கு உயிர்நாடியாக அமையலாம். இந்தக் கடினமான நாட்களில் கருணை நமக்கு வழிகாட்டட்டும் என கூறியுள்ளார்.