பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கத்தில் 4 பொதுக்கூட்டங்களில் கலந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
முதலாவதாக பாங்குராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
* குடியரசுத் தலைவர் தேர்தலின்போது திரவுபதி முர்முவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசும், பழங்குடியினருக்கு எதிரான காங்கிரசும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.
* குர்மி சமூகத்தின் குறைகளை திரிணாமுல் காங்கிரஸ் செவி கொடுத்து கேட்பதில்லை. ஆனால் அதன் வாக்கு வங்கிக்கு இட ஒதுக்கீடு வழங்க விரும்புகிறது
* 2029-ல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றுவதை தடுக்க காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ் சதி செய்தது. பெண்களால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
* நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய, அதிகமான பெண்கள் அரசியலில் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்
* பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களின் பாதுகாப்பு மற்றும் உறுதிபாட்டிற்கு மறுபெயர் பாஜக
* திரிணாமுல் காங்கிரசின் (கொடுமையான அரசு) மீதான மக்களின் கோபத்தை தற்போதைய உற்றசாகம் பிரதிபலிக்கிறது.
* ஊடுருவல்காரர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டத்தையும் மீறி, மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திரிணாமுல் காங்கிரஸ், பெண்களுக்கு அதிகாரமளித்தலை எதிர்க்கிறது.
* தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் காவல்துறையிடம் சரணடைய கடைசி வாய்ப்பை கொடுக்கிறேன். மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யாரும் தப்பிக்க முடியாது.
* இந்த ஆண்டு வங்காள தேர்தல் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். மக்கள் திரிணாமுல் காங்கிரசின் 'பயத்தை' முடிவுக்குக் கொண்டு வந்து, பாஜக-வின் நம்பிக்கைக்கு ஆணை வழங்குவார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.