நீண்ட இடைவெளிக்கு பிறகு நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது.
மேற்காசியாவில் நிலவும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.14 காசுகளும், டீசல் விலை ரூ3.11 காசுகளும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.95.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயராத நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.