திருப்பதி:
ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திரா துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் சகோதரர் நாகு பாபு. இவர் ஜனசனா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
தனது சகோதரரை ஆந்திர அமைச்சரவையில் மந்திரியாக்க வேண்டும் என பவன் கல்யாண் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே ஆந்திர அமைச்சரவையில் ஒரு மந்திரி பதவி இடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள பதவியில் நாக பாபுவை மந்திரியாக்க உள்ளதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.