நிர்மலா சீதாராமன் 
இந்தியா

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என நிர்மலா சீதாரமான் கூறினார்.

மாலை மலர்

புது டெல்லி:

2022-23 நிதியாண்டுக்கான பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாரமான்.  

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாம் கொரோனா காலக்கட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம்.

தொலைநோக்கு திட்டங்களுடன் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.