இந்தியா

கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு.. டெல்லியில் பரபரப்பு - வீடியோ

டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் இன்று நடந்த பாதயாத்திரையில் கெஜ்ரிவால் பங்கேற்றார்அவர் மீது திரவத்தை வீசிய நபரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பிடித்தினர்

மாலை மலர்

டெல்லி ஆளும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்ட பாதயாத்திரையில் அவர் மீது நபர் ஒருவர் மர்ம திரவத்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் இன்று நடந்த பாதயாத்திரையில் கெஜ்ரிவால் கலந்துகொண்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கெஜ்ரிவால் மீது திரவத்தை வீசிய நபரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பிடித்து அடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால்  அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. சம்பவத்தின் பின் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

தலைநகரில் முதலமைச்சராக இருந்த ஒருவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் சாமானியர்கள் எப்படி நடமாட முடியும் என ஆம் ஆத்மி மத்திய பாஜக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியின் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் மத்திய அரசின் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.