இந்தியா

அதெப்படி திமிங்கலம்... ரெயிலுக்குள் முளைத்த காளான் - நெட்டிசன்கள் கிண்டல்

ரெயிலுக்குள் நிலவும் ஈரமான சூழலில் காளான்கள் செழித்து வளர்ந்துள்ளது.இந்த புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ரெயிலுக்குள் காளான் வளர்ந்துள்ள புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த படத்தில், ரெயிலுக்குள் நிலவும் ஈரமான சூழலில் காளான்களும் பாசிகளும் ஒன்றாக செழித்து வளர்ந்துள்ளது.

அந்த பதிவில், இந்தியாவில் நீண்ட தூர ரெயில் பயணம் செய்யும் சைவப் பயணிகள் இப்போது 2 அல்லது 3 நாட்கள் இந்த காளான்களை பறித்து சாப்பிட்டு கொள்ளலாம்" என்று அவர் கிண்டல் அடித்துள்ளார்.