மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்கிலால் என்ற உடல் ஊனமுற்ற நபர் பிச்சை எடுத்து கோடீஸ்வரரான சம்பவத்தை அறிந்து அரசு அதிகாரிகளுக்கு தலையே சுற்றியுள்ளது.
சமீபத்தில் மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்திய பிச்சைக்காரர்கள் ஒழிப்பு நடவடிக்கையால் இவரது பின்னணி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.
மங்கிலால் என்பவர் பிச்சை எடுத்து மூன்று கான்கிரீட் வீடுகள், மூன்று ஆட்டோக்கள், மாருதி சுசுகி கார் என கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.
தன்னிடம் உள்ள வீடுகளையும் கார், ஆட்டோக்களையும் வாடகை விட்டு பணம் சம்பாதிக்கும் அவர், வட்டிக்கு பணம் கொடுத்தும் உதவுகிறாராம்.
இவர் தினமும் கடைவீதிகளில் மக்களிடமிருந்து 400-500 ரூபாய் வரை வசூலிக்கிறாராம். உடல் ஊனமுற்றவர் என்பதால் அரசு உதவியின் மூலம் ஒரு இலவச வீட்டையும் பெற்றுள்ள அவர், தொடர்ச்சியாக பிச்சை தொழிலை விடாமல் செய்துவருகிறார்.