இந்தியா

உணவகத்தில் ஆசையாக வாங்கிய தந்தூரி ரொட்டியில் பல்லி.. வைரலான வீடியோ - சாப்பிட்டவர் கதி என்ன?

தினமும் ஏராளமான மக்கள் தந்தூரி ரொட்டி சாப்பிட வருகிறார்கள்.உடனடியாக வாந்தி எடுக்கத் தொடங்கினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர், சௌபேபூரில் ராமையா ஹோட்டல் என்ற உணவகம் உள்ளது.

இங்கு பரோட்டாக்கள் மிகவும் பிரபலமானவை. தினமும் ஏராளமான மக்கள் தந்தூரி ரொட்டி சாப்பிட வருகிறார்கள்.

அதுவும், பெரும்பாலும் குடும்பங்கள் இரவு உணவிற்கு வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவகத்திற்குச் சென்றார்.

அனைவரும் தந்தூரி ரொட்டிகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சூழலில், ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது.

ஒரு தந்தூரி ரொட்டியில் ஒரு பல்லி காணப்பட்டது. அதைப் பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வாந்தி எடுக்கத் தொடங்கினார்.

கோபமடைந்த குடும்பத்தினர் உணவக உரிமையாளருடன் சண்டையிட்டனர்.

வாந்தி எடுத்தவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

कानपुर➡ग्राहकों के सेहत के साथ खिलवाड़➡ग्राहक की थाली में निकली छिपकली➡ढाबे पर खाने के दौरान निकली छिपकली➡खाने के बाद ग्राहक को हुई उल्टियां➡कारीगर ने रोटी के साथ सेक दी थी छिपकली➡रोटी के साथ ही सेक दी थी तंदूर में छिपकली➡चौबेपुर थाना क्षेत्र के बाजपेई ढाबा रमैया… pic.twitter.com/y8okiVqXJQ