இந்தியா

பிரதமர் மோடிக்கு கதகளி சிற்பத்தை பரிசளித்த கேரளம் முதல் மந்திரி

கேரளா​வில் பத்து ஆண்​டுக்​குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்​டும் ஆட்சியைப் பிடித்தது.

கேரளா​வில் சமீபத்​தில் நடந்த சட்​டசபைத் தேர்​தலில் காங்​கிரஸ் கட்சி தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி வெற்றி பெற்று 10 ஆண்​டுக்​குப் பிறகு மீண்​டும் ஆட்​சி​யைப் பிடித்​துள்​ளது.

கேரளம் மாநில முதல் மந்திரியாக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்​றார். இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முதல் மந்திரியா​க பதவி​யேற்ற பிறகு முதல் முறை​யாக வி.டி.சதீசன் டெல்லி சென்றார். டெல்​லி​யில் உள்ள கேரளா இல்லத்​தில் அவருக்கு தொண்டர்கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். அங்கு சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, மல்லிகார்ஜுன கார்​கே. கே.சி.வேணுகோ​பால், பிரி​யங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலை​வர்​களை நேரில் சந்​தித்​துப் பேசி​னார். சட்​டசபைத் தேர்​தலில் தனக்கு ஆதர​வாக பிர​சா​ரம் செய்த தலை​வர்​களுக்கு அவர் நன்றி தெரி​வித்தார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கேரளம் முதல் மந்திரி வி.டி.சதீசன் சந்தித்து பேசினார். அப்போது கேரளம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்ததாகவும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளையும் ஆதரவையும் கோரியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ​​கேரளாவின் புகழ்பெற்ற பாரம்பரிய நடன நாடகமான கதகளியை சித்தரிக்கும் ஒரு சிறிய நடனக் கலைஞரின் சிலையை முதல் மந்திரி சதீசன் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக வழங்கினார்.