புதுடெல்லி:
மத்திய அரசை கண்டித்து கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினார். இதில் மாநில மந்திரிகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். பேரணியாக சென்று அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். கேரள மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானவர்கள் அவருடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி முதல் மந்திரிகளான அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), பகவந்த்மான் (பஞ்சாப்) ஆகியோர் பங்கேற்றனர்.
கேரளாவுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக பினராயி விஜயன் போராட்டத்தின்போது குற்றம்சாட்டினார்.