இந்தியா

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக மாறிய Jammu-kashmir

'ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் ஹவுஸ்போட்டுகளில் முன்பதிவுகள் வேகமாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன'

மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பால் உள்ளூர் வர்த்தகம், கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் போக்குவரத்து துறைகளும் புத்துயிர் பெற்றுள்ளன. இதனால் காஷ்மீரின் சுற்றுலாத் துறை பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

" வெப்பத்திலிருந்து தப்பிக்க குளிர்ச்சியான சொர்க்கமாக காஷ்மீர் மாறியுள்ளது" என்பதே தற்போது சுற்றுலாப் பயணிகளின் கருத்தாக உள்ளது.

நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை நீடித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தலைநகர் Srinagar மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. Dal Lake பகுதியில் அதிகாலையிலேயே 'ஷிகாரா' படகு சவாரி மேற்கொண்டு, இயற்கை எழிலை ரசிக்கும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வரும் நிலையில், காஷ்மீரின் குளிர்ச்சியான காலநிலை மக்களை பெரிதும் கவர்கிறது.

இதனால் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் கோடை விடுமுறையை காஷ்மீரில் கழிக்க முன்வந்துள்ளனர்.

பிரபல சுற்றுலா தலங்களான Gulmarg, Pahalgam மற்றும் Sonamarg ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் ஹவுஸ்போட்டுகளில் முன்பதிவுகள் வேகமாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பால் உள்ளூர் வர்த்தகம், கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் போக்குவரத்து துறைகளும் புத்துயிர் பெற்றுள்ளன. இதனால் காஷ்மீரின் சுற்றுலாத் துறை பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

" வெப்பத்திலிருந்து தப்பிக்க குளிர்ச்சியான சொர்க்கமாக காஷ்மீர் மாறியுள்ளது" என்பதே தற்போது சுற்றுலாப் பயணிகளின் கருத்தாக உள்ளது.