இந்தியா

பிரபஞ்சத்தின் ரகசியமாக கருதப்படும் கருந்துளை தரவுகளை சேகரித்த இஸ்ரோ

ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் 2015 செப்டம்பர் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.எக்ஸ்ரே புரோட்டான் துகள்கள் குறித்தான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பிரபஞ்சத்தின் ரகசியமாக கருதப்படும் கருந்துளைகளின் முக்கிய தரவுகளை இஸ்ரோ சேகரித்துள்ளது.

கருந்துளைகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் 2015 செப்டம்பர் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

Swift J1727.8-1613, என்கிற கருந்துளையில் இருந்து வெளியே வரும் எக்ஸ்ரே புரோட்டான் துகள்கள் குறித்தான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த தரவுகள் கருந்துளையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என கண்டறிவதற்கு முக்கிய படியாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT