இந்தியா

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்- ராகுல் காந்தி மரியாதை

இந்திரா காந்தி நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை.ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

பண்டிட்ஜியின் இந்து, பாபுவின் அன்புக்குரியவர், அச்சமற்றவர், துணிச்சலானவர், நீதியை விரும்புபவர் - இந்தியாவின் இந்திரா!

பாட்டி, தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான உங்கள் தியாகம், பொது சேவையின் பாதையில் நம் அனைவரையும் எப்போதும் ஊக்குவிக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

पंडित जी की इंदु, बापू की प्रियदर्शिनी, निडर, निर्भीक, न्यायप्रिय - भारत की इंदिरा!दादी, देश की एकता और अखंडता के लिए आपका बलिदान हम सभी को जनसेवा के पथ पर सदा प्रेरित करता रहेगा। pic.twitter.com/ksV8ACt4Z9