இந்தியா

2025-26ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ. 1.78 லட்சம் கோடியாக உயர்வு- அமைச்சர் ராஜ்நாத் சிங்

2013-2014 நிதியாண்டில் ரூ. 43,746 கோடியாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி, தற்போது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சங்களை எட்டி வருகிறது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

* 2025-2026 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி, ரூ.1.78 லட்சம் கோடியாக வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

* மேலும்  முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.54 லட்சம் கோடியை விட 15.6 சதவீதம் வளர்ச்சியை குறிக்கிறது.

* மேலும் 2020-2021-ல் ரூ.84,643 கோடியாக இருந்ததை விட தற்போதைய உற்பத்தி எண்ணிக்கை 110 சதவீதம் அதிகரித்துள்ளது.

* 2013-2014 நிதியாண்டில் ரூ. 43,746 கோடியாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி, தற்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

* மேலும் 2025-2026 ஆம் ஆண்டில் தனியார் துறையின் பங்கும் சுமார் ரூ. 42,000 கோடியாக, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.

* சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி, பாதுகாப்பு உற்பத்தித் துறை மற்றும் பிற அனைத்துத் தரப்பினரின் கூட்டு முயற்சிகளின் விளைவாகும்.

* இந்த வளர்ச்சிப் பாதை, நாட்டின் விரிவடைந்து வரும் பாதுகாப்புத் தொழில் தளத்தின் தெளிவான அறிகுறியாகும் என்று கூறினார்.