இந்தியா

நள்ளிரவில் சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ் கைது: பீகாரில் பரபரப்பு

பப்பு யாதவ் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்றனர்.

மாலை மலர்

பாட்னா:

பீகார் மாநிலத்தின் பூர்ணியா தொகுதியைச் சேர்ந்தவர் சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ்.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள பப்பு யாதவ் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். அவரை பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்ற போலீசார், அதன்பின் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், 1995-ம் ஆண்டு நடந்த பழைய குற்ற சம்பவம் தொடர்பாக பப்பு யாதவை கைது செய்துள்ளோம். விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஆகவே அவரை கைது செய்தோம் என தெரிவித்தனர்.

சுயேட்சை எம்பி பப்பு யாதவை நள்ளிரவில் போலீசார் கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.