இந்தியா

Thrill Ride | கையில் துப்பாகியுடன் ட்ரிபில்ஸ்... கடைசியில் நடந்த கோரம் - வைரலாகும் வீடியோ

அந்த நேரத்தில், செங்கற்கள் ஏற்றப்பட்ட ஒரு டிராலி முன்னால் தோன்றுகிறது.

மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ்ச் மாவட்டத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று நடந்த கோரமான சாலை விபத்தின் காணொளியில், மூன்று இளைஞர்கள் மோட்டார்சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டிச் செல்வது தெரிகிறது.

இந்த காணொளியை, அவர்களது நண்பர்கள் இருவர் இரண்டாவது மோட்டார்சைக்கிளில் படம்பிடித்துள்ளனர். இரண்டு பைக்குகளும் ஒன்றையொன்று முந்தி செல்லவும், போக்குவரத்து நெரிசலுக்குள் புகுந்து செல்லவும் முயற்சிக்கின்றன. ஓட்டுநர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி வைத்திருப்பது போல் தெரிகிறது.

அந்த காணொளியில், ட்ரிபில்ஸ் (ஒரே பைக்கில் மூவர்) சவாரி செய்பவர்கள் ஒரு லாரியை முந்தி செல்ல முயற்சிப்பது தெரிகிறது. அந்த நேரத்தில், செங்கற்கள் ஏற்றப்பட்ட ஒரு டிராலி முன்னால் தோன்றுகிறது. மோட்டார்சைக்கிளில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், கட்டுப்பாட்டை இழந்து அந்த டிராலியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.

இந்த மோதலில் மோட்டார்சைக்கிளில் சென்ற மூன்று பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உப்லக்ஷ் கோல், அம்ரிஷ் கோல் மற்றும் ஹேம்ராஜ் கோல் ஆவர். இந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

பிரசாந்த் மற்றும் பிரதீப் திவேதி பயணித்த இரண்டாவது மோட்டார்சைக்கிள், காட்சிகளை பதிவு செய்வதற்காக அவர்களை பின்தொடர்ந்து வந்தது, இந்தச் சம்பவத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.