கர்நாடகாவில் மகிஷாசுரன் என்ற எருமை அரக்கனை சாமுண்டேஸ்வரி தேவி மலையில் வைத்து கொன்ற நிகழ்வை அடுத்து, ராஜா உடையார் என்பவர் தசரா பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாட தொடங்கினார்.
கர்நாடகாவில் தசரா விழாவானது தீமையை நன்மையால் வென்ற நிகழ்வை கொண்டாடும் ஒரு அரச திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்த விழா அம்மாநிலத்தில் ‘நாதஹப்பா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக்கு பிறகு 1610 ஆம் ஆண்டு ராஜா உடையார் தசரா பண்டிகையை பாரம்பரியமாக நிறுவினார்.
இந்த விழாவானது முதலில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து மைசூர் தலைநகராக அறிவிக்கப்பட்டபோது, தசரா மைசூரில் கொண்டாடப்பட ஆரம்பித்தது.
மகிஷாசுரன் என்ற எருமை அரக்கனை சாமுண்டேஸ்வரி தேவி மலையில் வைத்து கொன்ற நிகழ்வை அடுத்து, ‘மைசூரு’ என்ற நகரின் பெயர் உருவானது.
இதையடுத்து ராஜா உடையார், சாமுண்டேஸ்வரியை குலதெய்வமாக ஆக்கி, தசராவை மைசூரில் கொண்டாட தொடங்கினார்.
தசரா என்பது விஜயதசமியன்று முடிவடையும் ஒரு 10 நாள் திருவிழாவாகும். இந்த நாள் அதற்கு முந்தைய ஒன்பது நாட்களின் வெற்றியை குறிப்பதாக அமைந்துள்ளது.
நவராத்திரியின் முந்தைய ஒன்பது நாட்களுக்கான கொண்டாட்டங்கள், ஆறு நாட்களுக்குப் பிறகே தொடங்குகின்றன. ஆறாம் நாள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
இதையடுத்து எட்டாம் நாள் துர்கா தேவிக்கும், ஒன்பதாம் நாள் செல்வத்தின் தேவியான லட்சுமிக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. பத்தாம் நாளில், மைசூர் அரண்மனையிலிருந்து தொடங்கி மணிமண்டபத்தில் முடிவடையும் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெறுகிறது.
பத்தாம் நாளான விஜயதசமி அன்று, 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீதுள்ள தங்க தொட்டிலில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிலை வைக்கப்பட்டு, மைசூர் அரண்மனையில் இருந்து மணிமண்டபம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
மேலும் மகாநவமி அன்று மன்னனின் வாள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வழிபடப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்த நாள் மாலை, அந்த சிலை அம்பா விலாஸ் அரண்மனையில் இருந்து புறப்பட்டு, ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணிமண்டபத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
அங்கு பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு சமிக்குள் மறைத்து வைத்து, இந்த நாளில் அவற்றை மீண்டும் எடுத்ததை நினைவுகூறும் வகையில் கெளரவிக்கப்படுகிறது.
இந்த தசரா திருவிழாவில் 12 தசரா யானைகள், மைசூர் அரண்மனையிலிருந்து மண்டபம் வரையிலான ஊர்வலப் பாதையில் தினமும் இருமுறை அணிவகுத்துச் செல்கின்றன.
பத்து நாட்கள் இரவு நடைபெறும் ஜம்போ சவாரி மற்றும் குதிரைப்படை வீரர்கள் தீப்பந்தங்களை ஊர்வலமாக எடுத்து செல்லும் பஞ்சின கவசத்துடன் தசரா திருவிழா முடிவடைகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தசரா திருவிழாவானது, அக்டோபர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 அன்று வரை நடைபெறவுள்ளது.