புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் இன்று இரவு காலமானார்.
குருகிராமில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது என அவரது மகள் சுபாஷினி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சரத் யாதவ் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளாராக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.