கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஏராளமானோர் திருமணம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று 354 திருமணங்கள் நடைபெற்றன. குருவாயூரில் ஓரே நாளில் இவ்வளவு திருமணங்கள் நடப்பது இதுவே முதல் முறை.
கடந்த 2017-ம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது.
இன்று 363 திருமணங்களுக்கு முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் 9 குழுக்கள் தேவஸ்தானத்திற்கு தெரிவிக்காததால் 354 திருமணங்கள் மட்டும் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமணங்கள் தொடங்கின.