இந்தியா

நகராட்சி பணி நியமன மோசடி வழக்கு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் கைது- ED நடவடிக்கை

மேற்கு வங்க மாநில முதல்வராக சுவேந்து அதிகாரி பதவி ஏற்ற ஓரிரு நாட்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சுஜித் போஸை அமலாக்கத்துறை நகராட்சி பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்துள்ளது.

பண மோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சால்ட் லேக்கில் உள்ள சிஜிஓ காம்ப்ளக்ஸ் அலுவலகத்தில் நீண்ட நேரம் அவரிடம் கேள்வி கேட்ட நிலையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சுஜித் போஷ் பிதான்நகர் தொகுதியில் இருந்து 3 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் ஷரத்வாத் முகர்ஜியிடம் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஊழியர்கள், தூய்மைப் பணியார்கள், கிளார்க்குகள், பியூன்கள் உள்ளிட்டோர்களை நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது தொர்பான கடந்த ஆண்டு தீயணைப்பு மற்றும் அவசரகால சர்வீசஸ் முன்னாள் அமைச்சர் வீட்டில் ED சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.