ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
அதிகாரபூர்வ ஆதாரங்களின்படி, நிலநடுக்கம் மாலை 5.34 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியானது.