பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். 2-ம் நாளான இன்று காலை, பிரதமர் மோடி பரேகா விருந்தினர் மாளிகையில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
பின்னர் உ.பி.,யில் கங்கா விரைவுச்சாலை திறந்து வைத்த பின் அவர் உரையாற்றியதாவது:-
தி.மு.க.-வை விமர்சித்து பேசிய பிரதமர் மோடி
உத்தரப் பிரதேசத்துக்கு அதிக தொகுதி கிடைப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியும் திமுகவுக்கு உடந்தையாக குரல் எழுப்பியது. உத்தரப் பிரதேசத்தை இழிவுபடுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது திமுக.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.