ஹரியானாவில் திரையரங்குகள் மூடல் 
இந்தியா

ஹரியானாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - திரையரங்குகள் மூடல்

சந்தை மற்றும் வணிக வளாகங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி மற்றும் ஹரியானாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும்

ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹரியானா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி  அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குர்கான் நகரம் மற்றும் ஹரியானாவின் ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்ச்சூலா மற்றும் சோனிபட் ஆகிய மாவட்டங்களில்  சினிமா அரங்குகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் மூடப்படும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மால்கள் மற்றும் சந்தைகள் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்

பட்டுள்ளது.

மதுவிற்பனை பார்கள் மற்றும் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.  மாநிலம் முழுவதும் உள்ள காய்கறிச் சந்தைகள், பொதுப் போக்குவரத்து, பூங்காக்கள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்