இந்தியா

தந்தையை தொடர்ந்து கைது செய்ய தீவிரம்: சந்திரபாபு நாயுடு மகன் முன்ஜாமீன் கேட்டு மனு

சந்திரபாபு நாயுடு முதல் குற்றவாளியாகவும், அவரது மகன் லோகேஷ் 14-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.டெல்லியில் இருந்து வந்ததும் கைது செய்ய சிஐடி அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திராவில் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதான முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் அமராவதியில் உள்வட்ட சாலை சீரமைப்பு பணியில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஊழல் செய்ததாக சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சந்திரபாபு நாயுடு முதல் குற்றவாளியாகவும், அவரது மகன் லோகேஷ் 14-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது லோகேஷ் தனது தந்தையை ஜாமீனில் வெளியே எடுக்க டெல்லியில் தங்கி உள்ளார். அவர் டெல்லியில் இருந்து வந்ததும் கைது செய்ய சிஐடி அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் முன்ஜாமீன் வழங்க கோரி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.