கேரள மாநிலம் சபரிமலை கோவில் சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 40 கி.மீ. காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது.
சபரிமலை கோவில் பகுதியில் கனமழை கொட்டும் நிலையில் நனைந்தபடியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஐயப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதும் நிலையில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்லைனில் 70,000 பக்தர்கள் பதிவு செய்த நிலையில் ஸ்பாட் புக்கிங் மூலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.