இந்தியா

பாக். தொடர்புடைய ஓடிடி கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை- மத்திய அரசு உத்தரவு

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பாகிஸ்தான் தொடர்புடையதாக இருக்கும் பட்சத்தில் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது.

சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் தொடர்புடைய ஓடிடி கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தான் தொடர்பான சினிமா, பாடல், போட்காஸ்ட், வெப் சீரிஸ் ஆகியவற்றை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தொடர்புடையதாக இருக்கும் பட்சத்தில் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.