மேற்காசியப் போர் காரணமாக விதிக்கப்பட்ட, வணிக எல்பிஜி சிலிண்டர்கள் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
போரால் எல்பிஜி விநியோகம் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் , தற்போது 50% அளவுக்குத் தளர்த்தப்பட்டு மீண்டும் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு எரிவாயு உற்பத்தி மற்றும் வெளிநாட்டு இறக்குமதி சீரடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவால் உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் செலவுகள் கணிசமாகக் குறையும்.