இந்தியா

டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் விசாரணை

தொலைபேசி மூலம் வந்த மர்ம அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை.வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

டெல்லி செங்கோட்டை மற்றும் ஜமா மசூதி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி மூலம் வந்த மர்ம அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடியாக சோதனையிட்டனர்,

சோதனையில் எந்த பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் அது போலியான அழைப்பு எனவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.