பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். கிரிமினல் பாதுகாக்கப்படுகிறார்கள்.
நீட் வினாத்தாள் கசிவு தற்போது நடைபெற்றுள்ளது முதல் முறையல்லை. வினாத்தாள் கசிவு பீகார் மாநிலத்திலும் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இதுவரை மூத்த அதிகாரிகள் அல்லது பா.ஜ.க. தலைவர் தண்டனையை எதிர்கொள்ளவில்லை. அவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையில் எடுக்கப்படவில்லை" என்றார்.