இந்தியா

அசாம் தேர்தல் - காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்

அசாம் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது.

126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு ஏப்.9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முடிவுகள் தமிழ்நாட்டைப் போல மே.4ஆம் தேதி வெளியாகிறது.

அசாமில் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மறுபுறம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பிரதான எதிர்க்கட்சிகளாகப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் ஐந்து முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆட்சிக்கு வந்தால் அவை நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று நௌபோச்சாவில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.

அதன்படி,