இந்தியா

ஆந்திராவில் அரசு கார் சேவை- குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்

உள்ளூர் டிரைவர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும் சுற்றுலாவை மேம்படுத்துவதாகும்.உள்ளூரில் பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறையால் சாலைக்கு ஏற்றதாக சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

Maalaimalar

ஆந்திர அரசு, ஜனவரி முதல் வாரத்தில் விஜயவாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான டாக்ஸி மற்றும் ஆட்டோ முன்பதிவு தளமான "ஆந்திரா டாக்ஸி"-ஐத் தொடங்க உள்ளது.

தனியார் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், மலிவு, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான போக்குவரத்து சேவைகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

கனகதுர்கா கோவில், பவானி தீவு மற்றும் கிருஷ்ணா நதிக்கரையோரக் கோவில்கள் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிக்கனமான பயண விருப்பங்களை வழங்குவதன் மூலமும், உள்ளூர் டிரைவர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும் சுற்றுலாவை மேம்படுத்துவதாகும். உள்ளூரில் பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறையால் சாலைக்கு ஏற்றதாக சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

பயணிகள் பாதுகாப்பில், குறிப்பாக பெண்களுக்கு, சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பயணம் மற்றும் வாகனத் தரவுகள் உள்ளூர் போலீஸ் நிலையங்களுடன் பகிரப்பட்டு, மாநில தரவு மையத்திற்கு அனுப்பப்படும், அதிகாரிகள் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என தெரிவித்தனர்.