இந்தியா

இந்திய சினிமாவின் சகாப்தம் முடிவுற்றது..!- தர்மேந்திரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தர்மேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் காலமானார்.பாலிவுட்டில் தர்மேந்திராவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

மாலை மலர்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா (89) உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் காலமானார்.

இந்நிலையில், இந்திய சினிமாவின் சகாப்தம் முடிவுற்றது என்று தர்மேந்திராவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில்," நடிகர் தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவின் சகாப்தம் முடிவுற்றுள்ளதை குறிக்கிறது. பாலிவுட்டில் தர்மேந்திராவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

தர்மேந்திராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்றார்.