டெல்லியில் வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநரை சாலையில் வைத்து இளம்பெண் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல்லட்டில் சென்ற இளம்பெண்ணிற்கு ஓட்டுநர் வழிவிடவில்லை என்ற ஆத்திரத்தில் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் திடீரென ஓட்டுநரைத் தாக்க ஆரம்பித்தார். இளம்பெண் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
வீடியோ வைரலானதை அடுத்து, தாக்குதல் நடத்திய இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலால், வழிவிட இயலவில்லை என இந்த சம்பவத்திற்கு அடுத்து ஆட்டோ ஓட்டுநர் விளக்கம் அளித்தார்.