இந்தியா

குடிசையில்லா நகரம்...ரோகிங்கியாக்களை அடையாளம் காண ஏஐ - தேர்தல் அறிக்கையை வெளியிட்டது மஹாயுதி கூட்டணி

பெண்களுக்கான மாத உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும்.செயற்கை நுண்ணறிவு மூலம் ஊழலைத் தடுக்கவும், நிர்வாகச் சேவைகளை மொபைல் போன்களுக்கே கொண்டு வரவும் "தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம்" செயல்படுத்தப்படும்

மாலை மலர்

மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகியவற்றின் கூட்டணியான மஹாயுதி, இன்று தங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ராம்தாஸ் அதாவலே, வினோத் தவ்டே, அமீத் சதம், ஆஷிஷ் ஷெலர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 

 இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு: