ஐதராபாத்:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நோக்கி கன்டெய்னர் லாரி, புதிய கார்களை ஏற்றிக்கொண்டு நேற்று வந்தது.
அந்த லாரி தேசிய நெடுஞ்சாலை 65-ல் சென்று கொண்டிருந்தபோது ஜகீராபாத் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில், அந்த லாரியில் இருந்த 8 கார்களும் எரிந்து நாசமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார்கள் எரிந்து சாம்பலாகின.
விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.