ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகப்பா குடும்பம், கூட்டுக் குடும்பப் பாரம்பரியத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. 83 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குடும்பம் ஒன்றாகச் சமைத்து சாப்பிடுகின்றனர். அனைத்துப் பணிகளும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் செய்யப்படுகின்றன.
தலைமுறை தலைமுறையாக, இவர்கள் விவசாயம் செய்வதோடு, இதர வேலைகளையும் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். பெண்கள் ஒன்றாகச் சமைக்கிறார்கள், ஆண்கள் ஒன்றாக வேலைக்குச் செல்கிறார்கள். நாகப்பா குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்து வருகிறது.
இந்தக் குடும்பம் சமுதாயத்திற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இருப்பினும், இத்தனை உறுப்பினர்கள் இருப்பதால், அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பது சாத்தியமில்லை.
எனவே, அவர்கள் அருகருகே உள்ள 4 வீடுகளில் வசிக்கின்றனர். ஆனாலும், அந்தக் குடும்பம் முழுவதும் ஒரே இல்லமாகச் செயல்படுகிறது. உணவு, வருமானம் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
அனைவரும் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாகச் சிரித்து, துக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். யாரும் தனிமையாகவோ அல்லது மன அழுத்தத்துடனோ உணரவில்லை. அத்தகைய குடும்பங்களில் குழந்தைகள் மிகவும் எளிதாக வளர்க்கப்படுகின்றனர்.
கூட்டுக் குடும்பப் பாரம்பரியம் நாட்டிலிருந்து முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. பல இடங்களில், தலைமுறைகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன. இந்த கூட்டுக் குடும்பத்தின் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.