திருப்பதி:
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார். அங்கு கடந்த 13-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
வருகிற 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் ரோஜா 3-வது முறையாக வெற்றி பெறுவாரா அல்லது தோல்வி அடைவாரா என்ற பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.
ரோஜாவுக்கு அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரை எதிர்த்து 2 முறை தோல்வி அடைந்த தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பானு பிரகாஷ் மீண்டும் போட்டியிடுகிறார். நகரி தொகுதியில் 65 சதவீதம் பேர் தமிழர்கள் உள்ளனர்.
மேலும் அவருக்கு தொகுதியில் அதிருப்தி நிலவியதாகவும் கூறப்படுகிறது. இந்த காரணங்களால் ரோஜா வெற்றி பெறுவாரா அல்லது தோல்வி அடைவாரா என லட்சக்கணக்கில் பந்தயம் கட்டி வருகின்றனர்.