இந்தியா

3 மாணவர்கள் உயிரிழப்பு விவகாரம்- குழு அமைத்தது மத்திய அமைச்சகம்

குழுவில் கூடுதல் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், டெல்லி காவல்துறை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.விசாரணை குழு 30 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி தனியார் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது.

குழுவில் கூடுதல் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், டெல்லி காவல்துறை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

விசாரணை குழு 30 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வெள்ளத்தில் மூழ்கி இறந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ள டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT