இந்தியா

புதிதாக இயற்றப்பட்ட 3 சட்டங்கள்- ஜூலை 1ம் தேதி முதல் அமல்

மசோதாக்கள் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டது.குடியரசுத் தலைவர் திரெவுபதி முர்மு கடந்த டிசம்பர் 25ம் தேதி ஒப்புதல்.

புதிதாக இயற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா அதிநியம், பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.

இதற்கான மசோதாக்கள் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரெவுபதி முர்மு கடந்த டிசம்பர் 25ம் தேதி ஒப்புதல் அளித்தார்.