251 எம்பிக்கள் ஆதரவுடன் தொகுதி மறுவரையறையோடு இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா அறிமுகம் ஆன நிலையில், பின்னர் எதிர்ப்பை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது.
இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை மசோதாக்களை அறிமுகம் செய்ய அதிக உறுப்பினர்கள் ஆதரவு என்பதால், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பையும் மீறி மசோதாக்கள் அறிமுகம் ஆனது.
மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்ய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 251 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் 185 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மத்திய அரசு கொண்டுவந்த 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.