இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய தலைவராக முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்ட்டுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில், ஐதராபாத் பேராயர் பூலா அந்தோணி தலைமை பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
64 வயதான இவர், இந்தியாவில் உள்ள சுமார் 2 கோடி கத்தோலிக்கர்களுக்குத் தலைமை தாங்கும் முதல் தலித் பேராயர் ஆவார்.