செய்திகள்

மாற்றுத்திறனாளி துப்பாக்கி சுடுதல் போட்டி: சென்னை வீராங்கனை தங்கம் வென்றார்

தேசிய அளவிலான மாற்று திறனாளிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் சென்னை வீராங்கனை எழிலரசி தங்கப்பதக்கம் வென்றார்.

மாலை மலர்

சென்னை:

தேசிய அளவிலான மாற்று திறனாளிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி டெல்லியில் நடந்தது.

இந்தப் போட்டியில் சென்னை வீராங்கனை எழிலரசி பங்கேற்றார். 10 மீட்டர் தூர துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார்.

தங்கப்பதக்கம் வென்ற எழிலரசி சென்னை பல்கலைகழகத்தில் கணிதத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.