மின்சாரம் தாக்கி பலி 
செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

காரியாபட்டி:

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் தச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 56). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் போட சென்ற போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சந்திரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.