புதுடெல்லி:
இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் எனவும் அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் 804-வது ‘உருஸ்’ கொண்டாட்டங்கள் தற்போது அஜ்மீர் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த உருஸ் விழாவின்போது அவரது நினைவிடத்தின்மீது மலர்ப்போர்வைகளையும், சால்வைகளையும் அணிவித்து, மகிழும் மரபினை இங்குள்ள முஸ்லிம்களுடன், இந்து மக்களும் கடைபிடித்து வருகின்றனர்.
அவ்வகையில், காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி, இன்று சால்வையை காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்த மலர்ப்போர்வையை பெற்றுகொண்ட மத்திய சிறுபான்மையினர் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, நாளை மறுநாள் அஜ்மீர் நகருக்கு செல்கிறார்.
சால்வையுடன், உருஸ் விழாவை வாழ்த்தியும், இந்தியர்களிடையே மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும் பிரதமர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியையும் வரும் 19-ம் தேதி முக்தார் அப்பாஸ் நக்வி தர்கா நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கிறார். #tamilnews #naqvi #ajmerdargah #pmmodi