செய்திகள்

சரக்கு, சேவை வரி: பீடி, ஜவுளித்துறை பிரச்சினை குறித்து நிதி மந்திரியுடன் ஆலோசனை - முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்

பீடி, ஜவுளி, சினிமா, கிரானைட் உள்ளிட்ட தொழில்துறையினர் வெளியிட்டுள்ள கவலைகள் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லியுடன் ஆலோசிக்கப்படும் என முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

மாலை மலர்

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய சரக்கு, சேவை வரியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக ஜவுளி, பீடி உள்ளிட்ட தொழில்துறையினர் கவலை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக வேலை நிறுத்த போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ஐதராபாத்தில் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் சரக்கு, சேவை வரி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் முக்தர் அப்பாஸ் நக்வி, பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில்,