கோப்புபடம் 
செய்திகள்

நாகூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

நாகூர் அருகே வேலை வாய்ப்பு இல்லாமல் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

நாகூர்:

நாகூரை அடுத்த தெத்தி கீழத்தெருவை சேர்ந்த வடிவேல் மகன் சிவமுருகன் (வயது 28). இவர், தற்போது வேலை வாய்ப்பு இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த சிவமுருகன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கீற்று கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதைகண்ட உறவினர்கள் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.