நாகமலைபுதுக்கோட்டை:
நாகமலைபுதுக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் நவீன்(வயது 22) . இவர் நாகமலைபுதுக்கோட்டையில் மதுரை-தேனி மெயின் ரோட்டில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த நவீன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.