உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.
இந்நிலையில், இன்று மீண்டும் வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் இருந்து கிழக்கு நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டது என தென்கொரியா கூறியுள்ளது.